முன்னுரை
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சரித்திரத்தின் மீது ஒரு ஈடுபாடு உண்டு. அதனால் சரித்திரம் சம்பந்தப்பட்ட நூல்கள் தான் அதிகம் என்னுடைய புத்தக அலமாரியில் இருக்கும். நண்பர் Nandakumar (Trichy) நல்ல புத்தக வாசிப்பாளர். அவரிடம் நிறைய புத்தகங்கள் கேட்டுருந்தேன். பதிப்பகங்களில் தேடி வாங்கி அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்துவிட்டு படித்த புத்தகங்களின் விமர்சனத்தை எழுதுங்க என்று கோரிக்கை விடுத்தார். எனக்கு விமர்சனம் எழுத வராது வேண்டுமென்றால் இதுவரை படித்த புத்தகங்களின் இருந்து தொகுத்து பிரபலமான அரசர்களை பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று சொன்னேன். அப்படி சாணக்யரில் ஆரம்பித்து அசோகர் போனது. மெல்ல அந்த வம்சம் எப்படி ஆரம்பித்தது அதன் முடிவு எப்படியானது என்று சேர்த்து எழுதலாம் என்று ஆரம்பித்து எழுத ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பல அரசுகள் தொடர்ந்து ஒவ்வொரு அரசுகளை பற்றி படித்தவற்றையும் கூகுளில் தேடியவற்றையும் சேர்த்து எழுதியுள்ளேன். தேட தேட விஷயங்கள் ஊற்று போல ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்தது. அக்பர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் லக்கிபாக் என்ற பெயரில் 1 லட்சம் மாமரங்கள் கொண்...