Posts

Showing posts from April 24, 2022

34) பிற்கால சேர பேரரசு

  பிற்கால சேரர்கள் (கி.பி.598-1122) சங்ககால சேரர்களின் எல்லைகள் கொங்கணத்தின் எல்லைகளாகவே இருந்தது. ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால் தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாக போயின. பக்தி கால சேரர்கள் ஆட்சி முடிந்தவுடன் கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தை தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர். கேரளம் சோழதேசத்திற்கு மேற்கிலும் அரபிக் கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு கர்நாடகதேசத்திற்கு தெற்கிலும் அகன்று பரவியிருந்தது. கேரளம் வட கேரளம் தென் கேரளம் என இருபிரிவுகளாகவும் தென் கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும் வட கேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கி வருகிறது. சேரமான் மாக்கோதையார் சேர நாட்டை 12 பிரிவுகளாக பிரித்து 12 குறுநில மன்னர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் செய்திகள் உள்ளது. அந்த 12 பிரிவுகள் பின்வருமாறு: 1) நெடியிருப்பு - கோழிக்கோடு 2) ஆரங்கோடு - வள்ளுவநாடு 3) பெரும்படப்பு - கொச்சி 4) திருப்பாப்பூர் - திருவிதாங்கூர் 5) குறும்பியாதிரி - குறும்ப நாடு 6) புறநாட்டுக்...

33) பிற்கால சோழர்கள் பேரரசு (சாளுக்கிய சோழர் முதலாம் குலோத்துங்கனின் தொடர்ச்சி)

பிற்கால சோழர்கள் (சாளுக்கிய சோழர்கள்) (கி.பி.1070-1279) :  முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) : முதலாம் இராஜேந்திர சோழனின் தங்கையான குந்தவை கீழை சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த இராஜ நரேந்திரனுக்கும் தனது மகளான அம்மங்கை தேவியை கி.பி.1022ல் இராஜேந்திர சோழன் மணமுடித்து வைத்தார். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுடைய வாரிசுகளின் ஒருவரே இளவரசனாக இருந்தவர் தான் முதலாம் குலோத்துங்க சோழன். இவர் வீரராஜேந்திரனுடன் கடாரத்திற்கு சென்ற படையில் போரிட்டு வென்ற அனுபவம் கொண்டவரும் கூட. இவரிலிருந்து தான் விஜயாலய சோழனின் நேரிடை வாரிசுகளிடமிருந்த அரசாட்சி சாளுக்கியர் சோழர்கள் என கலப்பு வம்சம் சோழ அரியணையில் அமர்ந்தது. இவரது ஆட்சிகாலத்தில் உள்நாட்டு குழப்பங்களே மிகுந்திருந்தது. அதை திறமையாக சமாளித்து பூசலின்றி 50 ஆண்டுகாலம் ஆண்டார். இந்த நேரத்தில் தான் 70 ஆண்டுகாலம் சோழர்களின் கையில் இருந்த சிங்களத்தை அதன் மன்னன் விஜயபாகு மீட்டார். உள்நாட்டில் குழப்பங்கள் மிகுந்திருந்ததால் சிங்களத்தை மீட்க படைகளை அனுப்பவில்லை. இவரின் ஆட்சியில் கடைசிகாலங்களில் சேர பாண்டிய நாடுகளில் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியதா...

32) பிற்கால சோழர்கள் பேரரசு (விஜயாலயச் சோழன் பரம்பரை)

Image
பிற்கால சோழர்கள் (கி.பி.846-1070) : பிற்காலச் சோழர்களின் ஆட்சியின் பாதிப்புகள் நிறைய தமிழகத்துக்கு ஏற்பட்டது. அவையெல்லாம் சாதகமான பாதகங்களே. மரங்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட கோயில்கள் இவர்களின் ஆட்சியில் தான் பாறைக்கற்களால் கட்டப்பட்டு 1000 ஆண்டுகளை கடந்தும் இன்றும் நிலைபெறும் கோயில்களாக தமிழகத்தின் கட்டிடக்கலை சிற்பக்கலையின் சிறப்புகளை எடுத்துக்கூறுகின்றன.  கண்டாதித்யரின் மனைவியான செம்பியன் மாதேவியினால் கட்டப்பட்ட கோயில்கள் ஏராளம். பின்னர் வந்த இராஜராஜ சோழனின் ஆட்சியிலும் அவருக்கு பின் வந்த அவர் மகன் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியிலும் பின் வந்தவர்களாலும் கட்டப்பட்ட கோயில்கள் இன்றும் தமிழனின் சிறப்பை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது. கட்டிடக்கலை, சிற்பக்கலை மட்டுமல்ல போர் கலையும் வீரியம் பெற்று நாட்டை விரிவுபடுத்தும் நிகழ்வும் சிறப்புற நிகழ்ந்தது. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் சோழப் பேரரசு 36 லட்சம் கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்திருந்தது. மலேயா, ஜாவா, சுமத்ரா, இலட்சத்தீவுகள் ஆகியவற்றுக்கு ஆமைகளின் வழித்தடத்தை கொண்டு கடல் வழியே சென்று வாணிகத்தையும் நாட்டையும் விரிவுபடு...

31) தென்காசி பாண்டியர்கள் அரசு

Image
தென்காசி பாண்டியர்கள் (கி.பி.1422- 17ம் நூற்றாண்டின் மத்தியில்) முகமதிய சுல்தான்களினாலும் அடுத்து வந்த விஜயநகர நாயக்கர்களாலும் தொடர்ந்த படையெடுப்புகள் தொடர் தோல்விகளாலும் பாண்டியர்கள் வலிமை இழந்து பூர்வீக நிலங்கள் தலைநகர் மதுரையை இழந்து தென் தமிழகத்தின் கடைசிக்கே வந்தனர். அவர்களில் சிலர் திருநெல்வேலியை தலைநகராக கொண்டனர் சிலர் தென்காசியை தலைநகராக கொண்டு சிற்றரசர்களாக மாறிபோயினர்.அப்படி தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட முதல் மன்னன் தான்  சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1422-1463) : தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட முதல் பாண்டியர். சிவபெருமான் காசியில் உள்ள தனது கோவில் அழியும் நிலையில் இருப்பதால் தென்காசியில் கோயில் கட்டுமாறு இவரின் கனவில் வந்து கூற அவ்வாறே தென்காசியில் பெரிய கோவிலை தன் செலவில் கட்ட ஆரம்பித்து தன்னால் முடியவில்லை என்றபோது உதவுபவர்களின் பாதம் வணங்குவேன் என்று சொல்லி தன் உருவத்தை கோயில் வாசலிலையே வரைந்தவர். பெரிய ராஜகோபுரம் ஒன்றையும் எழுப்பினார். கோயிலை விரிவு செய்பவர்கள் பாதத்தில் விழுந்து வணங்குவேன் என்றார். கோயிலை குறித்த வேண்டுகோள...

30) பிற்கால பாண்டியர்கள் பேரரசு

Image
பிற்கால பாண்டியர்கள் (கி.பி.945-1311)  பராந்தக சோழரின் ஆட்சியில் பாண்டிய நாட்டை சோழர்களிடம் இழந்த மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் சிங்களரின் உதவி பெற்றும் தோல்வியடைந்து மீண்டும் சிங்கள உதவியை நாடி இலங்கைக்கு சென்று பாண்டியரின் பரம்பரை பொக்கிஷங்களை இலங்கை அரசரிடம் ஒப்படைத்து சேர நாட்டுக்கு சென்று அவர்களின் உதவியை நாட முயற்சித்தும் பலனில்லை. அதனால் விரக்தியில் சேர நாட்டிலையே தங்கியதாகவும் அவருக்கு பின்னர் அவரது மகனான வீரபாண்டியன் மதுரையை சோழர்களிடமிருந்து மீட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் சிலர் இராசசிம்ம பாண்டியனும் அவர் மகன் வீரபாண்டியனும் சோழர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் என்றும் வீரபாண்டியன் சோழர்களை எதிர்த்து சுயாட்சியாய் அரசை மீட்டுக் கொண்டார் என்றும் கூறுகின்றனர். அவரிடமிருந்து பிற்கால பாண்டியர்களின் வரிசை ஆரம்பிக்கிறது. வீரபாண்டியன் (கி.பி.945-966) : மூன்றாம் இராசசிம்மன் கி.பி.945ல் மறைந்ததை அடுத்து ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சோழருக்கு கப்பம் செலுத்தாமல் மதுரை ஆட்சியை மீட்டுக் கொண்டார். மதுரை நெல்லை இராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் இவர் சோழருக்கு கப...

29) இடைக்கால பாண்டிய பேரரசு

இடைக்கால பாண்டியர்கள் (கி.பி.575-919) : கி.பி. 3ம் நூற்றாண்டுகளில் களப்பிரர்களிடம் ஆட்சியை இழந்த பாண்டியர்கள் இடம் தெரியாமல் போயினர். சிலர் பாண்டியர்கள் இலங்கை சென்று அங்கே வாழ்ந்து வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று தங்கள் அரசை நிறுவினார்கள் என்றும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக வியட்நாமில் கி.பி.3ம் நூற்றாண்டு கல்வெட்டில்  ஶ்ரீமாறன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கே களப்பிரர்களின் கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் சோழர்களும் கூட. அந்த நேரத்தில் பல்லவ பேரரசு நிலைபெற்றுக்கொண்டிருந்தது. கி.பி.575ல் பாண்டியனான "கடுங்கோன் பாண்டியன்" களப்பிரர்களை வென்று மதுரையை மீட்டெடுத்தார். சிலர் கி.பி.560ல் மீட்டெடுத்தார் என்றும் கூறுகிறார்கள். பின்னர் அபராஜித பல்லவரும் களப்பிரர்களை விரட்டியடிக்க சோழர்களும் எழுச்சி பெற்று ஆட்சியை மீட்டெடுத்தனர். களப்பிரர்கள் முத்தரையர்களாக தஞ்சாவூர் மற்றும் செந்தலையோடு தங்கள் ஆட்சியை நிறுத்திக்கொண்டனர். களப்பிரர்களை வென்று பாண்டிய ஆட்சியை மீட்டெடுத்த கடுங்கோன் பாண்டியனிலிருந்து இடைக்கால பாண்டியர்கள் ஆரம்பமாகிறார்க...