21) குர்ஜர - பிரதிஹரர்கள் பேரரசு
குர்ஜர - பிரதிஹரர்கள் பேரரசு (கி.பி.730-1036) : கி.பி. 7ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து (கி.பி.632) கி.பி.11ம் நூற்றாண்டு (கி.பி.1036) வரை வட இந்தியபகுதிகளை ஆண்டவர்கள் இவர்கள். இவர்களின் தலைநகரம் உஜ்ஜையினி மற்றும் கன்னோசி. சமஸ்கிருதமும் பிராகிருதமும் இவர்களின் ஆட்சியில் பேசப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் குப்தர்கள் சாம்ராஜ்யத்திற்கு பிறகு மத்திய ஆசியாவிலிருந்து வந்து இன்றைய இராஜஸ்தானில் குடியேறியவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இராணுவபலம் பெற்றனர். ஹர்ஷவர்த்தனரோடு முடிந்த புஷ்யபூதி வம்சம் அழிவுக்கு பின் நிறைய இராஜ்யங்கள் செழிக்க ஆரம்பித்தது. அப்படி ஆரம்பித்த சாம்ராஜ்யங்களுள் ஒன்று தான் குர்ஜரா-பிரதிஹரா அரசு. சாளுக்கியர்கள், குர்ஜரா-பிரதிஹரா, பரமரர்கள், சாம்ணர்கள் ஆகியவை நான்கு குணங்களும் அக்னிகுலங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நான்கு இராஜ்புத்ர வம்சங்களும் வெளியே இருந்து வரும் அன்னியர்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. பிரதிஹரா என்பதற்கு "வாசல் காப்பான்" என்று அர்த்தம். குர்ஜரா என்ற பெயரிலிருந்து தான் இன்றைய குஜராத் பெயர் உருவாயிற்று. சில வரலாற்று ஆய்வாளர்கள் இவர்கள் வெள்ளை நிறமுடைய ...