100) இந்திய சுதந்திர போராட்டம் (காந்தியின் வருகைக்கு பின்னர் முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை)
இந்திய சுதந்திர போராட்டம் : (காந்தியின் இந்திய வருகைக்கு பின்னர் முதல் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை) முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கி.பி.1915ல் தென்னாப்பிரிக்காவில் இந்தியா திரும்பினார் காந்தி. தென்னாப்பிரிக்கா போராட்டங்களில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த கோபாலகிருஷ்ண கோகலே யின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை பாரீஸில் சந்திக்க முதலில் லண்டன் சென்றவர் முதல் உலகப்போர் ஆரம்பித்த காரணத்தால் லண்டனிலையே இருக்க வேண்டியதாயிற்று. பின்னர் பம்பாய் திரும்பியவுடன் பம்பாய்யின் கவர்னர் சர் வெல்லிங்டன் காந்தியை சந்திக்க விருப்பப்படவே அவரை சந்தித்தார். பின்னர் பூனாவுக்கு சென்று கோகலேவை சந்தித்தார். குஜராத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைக்க விருப்பப்படுவதாக அவரிடம் கூற அவர் இந்தியா முழுவதும் ஒரு ஆண்டு சுற்றுப்பயணம் செய்து வரும்படி கூற அவ்வாறே பயணப்பட்ட அவர் கல்கத்தாவில் தாகூரை சாந்தி நிகேதனில் சந்தித்த போது கோகலேவின் மரணச் செய்தி அறிந்து பூனா திரும்பினார். கி.பி.1916 ஏப்ரலில் சென்னை வந்த அவர் தென்னாப்பிரிக்காவில் உயிர் தியாகம் செய்த வள்ளியம்மையின் ஊரான தில்லையாடிக்கு சென்று தமிழர்கள் நாகப்பன்...